பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் கொடுத்த பணத்தில் ஒரு பகுதியை ஆயுத கொள்முதல் செய்வது என இயக்கம் முடிவு செய்தது.அதன் படி ஏராளமான நவீன ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், கண்ணிவெடிகள், தகவல் தொடர்பு சாதனங்கள் என கப்பலில் சென்னை துறைமுகத்துக்கு சரக்கு வந்தபோது சிக்கல் வந்தது. புலனாய்வு அதிகாரிகள் மோப்பம் பிடித்து விட்டால், எல்லாம் வீணாகி விடும். தலைவர் யோசித்தார்,
அண்ணன் பாலசிங்கத்தை அழைத்தார். அண்ணா நீங்கள் முதலமைச்சரிடம் விசயத்தை சொல்லுங்கள், எதையும் மறைக்க வேண்டாம், நமது ஆயுத கப்பல் வந்திருக்கிறது. சேதாரமில்லாமல் நமக்கு சரக்கு கிடைத்தாக வேண்டும், அவர்தான் உதவ வேண்டும், அவரால் மட்டுமே முடியும். இப்போதும் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் தான் உதவினார். சற்றும் சலனம் இல்லை, பரபரப்பில்லை. ஒரு ஈ , எறும்புக்கு கூட விஷயம்
தெரியாது. ஒரே ஒரு போன் கால், யாருக்கு போன் செய்தார் என்று யாருக்கும் தெரியாது. ஆயுதங்கள் அனைத்தும் அலுங்காமல்,குலுங்காமல் திருவான்மியூர் வீட்டுக்கு வந்து சேர்ந்தன.
அதுதான் எம்.ஜி.ஆர், எம்.ஜி.ஆர், எம்.ஜி.ஆர்,
அவருடைய பலம் அப்படி
அந்த மாமனிதரோடு இருந்தவர்கள் பாக்கியவான்கள்
No comments:
Post a Comment