தமிழர்களை புழு பூச்சிக்கு அளவுக்கு கூட மதிக்காத இலங்கை அரசின் புதிய அரசியல் அமைப்பு சட்டம் 1978 செப்டம்பர் 7 ஆம் நாள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜெயவர்த்தனே அரசுக்கு எந்த வகையில் சவால் விடுக்கலாம் என்று அரசியல் கட்சியினர், போராளி இளைஞர்கள் எல்லோரும் ஆளுக்கொரு பக்கம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். தலைவர் அதற்குள் காரியத்தை செய்தே விட்டார். ஏர்
லங்காவுக்கு சொந்தமான ஒரு ஆவரோ விமானம் பயணிகள் இறங்கும் வரை பொறுத்திருந்து விட்டு வெடிக்கும் விதத்தில் ஏற்பாடு செய்து தேசத்தையே திரும்பி பார்க்க செய்தார். இது பேசும் இயக்கமல்ல, செய்யும் இயக்கம் என்று அத்தனை பேருக்கும் புரிந்தது அப்போதுதான்.
No comments:
Post a Comment