விட்டு விடுவதற்கில்லை, சீலன் ஆனந்த் உயிர் இயற்கையில் கரைவதற்குள் பதிலளித்தாக வேண்டும். செல்லக்கிளி, கிளி பறந்து வந்தது, கூடவே அவருடைய படை பிரிவினர். புலனாய்வு பிரிவினர் தட்டி விடப்பட்டனர். பதில் கொடுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் திருநெல்வேலி. கோபம் குறைய வில்லை, சற்றும் அணையாத தீ, உள்ளுக்குள் கனன்ற பெரு நெருப்பு, சீலனை... இழந்த ஆவேசம்.புறப்பட்டார்.தலைவர்,உடன் செல்லக்கிளி,விக்டர்,சந்தோசம்,குமரப்பா,புலேந்திரன்,கிட்டு உள்ளிட்ட பதினான்கு பேர் கொண்ட குழு. தலைவரே நேரடியாக களம் இறங்கினாலும் இந்த திட்டத்துக்கு செல்லக்கிளிதான் கமாண்டர். இருள் மூடிய வானம், பொதுமக்களுக்கு விஷயம் மறைமுகமாக சொல்லப்பட்டிருந்தது. சாலையில் கண்ணிவெடிகள் பொருத்தப்பட்டன. பதினான்கு பெரும் நிலையெடுத்து சாலையின் இருபுறமும் ஆங்காங்கே வீடுகளில் பின்னால், மறைவில் பதுங்கி நின்றனர். ரோந்து வரும் ராணுவ கவச வாகனத்துக்கு கண்ணிவெடி, ஜீப்பில் வருபவர்களுக்கு துப்பாக்கிகுண்டுகள் பரிசாக கொடுப்பது என முடிவு செய்யப்பட்டிருந்தது. செல்லக்கிளி அவசரப்பட்டு ஜீப் வரும் போது விசையை அழுத்த ஜீப் துக்கிஎரியப்பட்டது. அதில் இருந்தவர்கள் அடுத்தகணமே இறந்தார்கள்.பின்னால் வந்த கவச வாகனத்தில் இருந்தவர்கள் மீது துப்பாக்கிசூடு ஆரம்பமானது. எந்த பக்கத்தில் இருந்து யார் தாக்குகிறார்கள் என்று சுதாகரிப்பதர்க்குள்ளாகவே நான்கு உடல்கள் சிதறி விழுந்தன. தலைவர் நிதானம் தவறாமல் தன்னுடைய G 3 ரக துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே இருந்தார். ஒன்பது குண்டுகள், ஒன்பது உடல்கள். தலைவரின் போர்த்திறனை போராளிகள் களத்தில் நேரடியாக கண்டனர், அசந்து போனார்கள் குமரப்பா, கிட்டு, விக்டர் போன்றோர். உக்கிரமான தலைவரின் தாக்குதலில் 13 சிங்கள காடையர்கள் செத்து ஒழிந்தனர். கமாண்டர் செல்லக்கிளி மாவீரர் ஆனார். 13 சிங்கள காடையர்கள் செத்து ஒழிந்தனர். அது ரிச்சர்ட் ஜெயவர்த்தனேவை அதிர செய்தது
No comments:
Post a Comment